Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைன் மக்கள் செத்தா நீங்கதான் காரணம்! – நேட்டோ நாடுகளை வறுத்தெடுத்த ஜெலன்ஸ்கி!

உக்ரைன் மக்கள் செத்தா நீங்கதான் காரணம்! – நேட்டோ நாடுகளை வறுத்தெடுத்த ஜெலன்ஸ்கி!
, சனி, 5 மார்ச் 2022 (10:20 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உதவ வராத நேட்டோ நாடுகள் மீது அதிபர் ஜெலன்ஸ்கி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் நிதியுதவி, ஆயுதங்கள் வழங்கினாலும் உக்ரைனுக்கு ஆதரவாக நேராக போரில் ஈடுபடவில்லை. பல பகுதிகளில் உக்ரைன் மக்களே ஆயுதம் தாக்கி ரஷ்யா ராணுவத்தை எதிர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் உதவ வராத நேச நாடுகள் மீது கடும் விமர்சனம் வைத்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி “இன்று முதல், உயிரை இழக்கப்போகும் அனைத்து உக்ரேனிய மக்களுக்கான காரணம், நீங்கள் மட்டுமே. உங்கள் பலவீனத்தாலும் உங்கள் ஒற்றுமை இன்மையாலும் தான், மக்கள் உயிரிழக்க போகிறார்கள். வெறும் 50 டன் டீசலை உங்களால் உக்ரைனுக்கு வழங்க முடிந்துள்ளது. அதை வைத்து நாம் "Budapest குறிப்பாணையை" வேண்டுமானால் எரிக்கலாம்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் “உக்ரைன் மீது குண்டுவீசுவதற்கு NATO நாடுகளே பச்சைக் கொடி காட்டுகிறது. நீங்கள் உக்ரைனின் வான்வெளியை மூடியிருக்கலாம். உங்களால் யாரைப் பாதுகாக்க முடியும்? நீங்கள் உண்மையில் NATO-வில் உள்ள உறுப்பினர்களையாவது பாதுகாப்பீர்களா? என்று கூட தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சரிந்தது தங்கம் விலை: இன்றைய சென்னை நிலவரம்!