Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக சிறுவர்களை துப்பாக்கியால் சுட்ட பள்ளி சிறுவன்! – அமெரிக்காவில் தொடரும் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (09:01 IST)
அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது 15 வயது சிறுவன் சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எந்த வித காரணமும் இல்லாமல் பொதுமக்கள் கூடும் இடங்களில் திடீரென தோன்றும் ஆசாமிகள் பலரை சரமாரியாக சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் தினசரி நிகழ்வாகி வருகிறது.

இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் 15 வயது மாணவன் காலை 10 மணியளவில் பள்ளி வளாகத்தில் நின்றிருந்த தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

இதனால் படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கியால் சுட்ட சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments