Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா தூதர்

Webdunia
புதன், 17 மே 2017 (05:16 IST)
வடகொரியா மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் போர் தொடுக்கும் என்று கூறப்பட்டு வந்தாலும் இந்த போர் அணு ஆயுத போராக இருக்கும் என்பதால் உலகின் பாதி பகுதி இந்த போரால் அழியும் ஆபத்து இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.



 


எனவே வடகொரியாவிடம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி அணு ஆயுத சோதனை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் போரை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்காவுக்கு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று நடந்த ஐநா சபை கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறும் போது, அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்துவதை வடகொரியா நிறுத்தினால், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறினார். மேலும் வடகொரியா மீதான புதிய பொருளாதாரத் தடைகளை நீக்க ஐ.நா. பரிசீலிக்கும் என்றும் ஹாலே தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு நம்பிக்கை தருவதாக இருப்பதாகவும் விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தென்கொரியா அதிபர் தெரிவித்துள்ளார்


 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments