Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐநா மனித உரிமை கவுன்சிலில் வைகோவை மிரட்டிய சிங்களர்கள்: பெரும் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (00:24 IST)
ஜெனீவா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் குறித்து பேசுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றுள்ளார் என்பது தெரிந்ததே



 
 
இந்த நிலையில் ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ள வைகோ செல்ல முயன்றபோது ஐந்து பேர் கொண்ட சிங்களர்கள் குழு ஒன்று அவரிடம் தகராறு செய்ய முயற்சிசித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
 
இதுகுறித்து பேட்டியளித்த வைகோ, 'ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று மனித உரிமை கவுன்சிலில் இலங்கையில் நடந்தது குறித்து பேசக்கூடாது என்று ஒருசிலர் மிரட்டினர். ஆனால் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை கண்டிப்பாக பேசுவேன் என்று நான் கூறியதால் என்னை தாக்க முயற்சித்தனர். இதுகுறித்து நான் அங்கிருந்த உயரதிகாரி ஒருவரிடம் புகார் அளித்துள்ளேன். அதன்பின்னர் எனக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
 
இந்த நிலையில் வைகோவை சிங்களவர்கள் தாக்க செய்த முயற்சி கண்டனத்துக்குரியது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments