Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூங்கி விழித்த பெண்ணின் படுக்கையில் மலைப்பாம்பு!

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (08:29 IST)
நீங்கள் உறக்கம் முடிந்து காலையில் கண்விழித்துப் பார்க்கும்போது உங்கள் அருகில் ஒரு மலைப்பாம்பு படுத்திருந்தால் எப்படி இருக்கும்?

 
மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு இது உண்மையாகவே நடந்துள்ளது.
 
கடந்த திங்களன்று அப்பெண் கண்விழித்துப் பார்த்தபோது, அவரது படுக்கையில் சுமார் மூன்று அடி நீளம் உள்ள அந்த ராயல் வகை மலைப்பாம்பு சுருண்டு படுத்திருந்தது.
 
உடனே அந்தப் பெண் உள்ளூர் விலங்குகள் நல அமைப்பு ஒன்றுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் அந்தப் பாம்பு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டது.
 
அதே பகுதியில் வசிக்கும் யார் வீட்டிலாவது செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் அந்த மலைப்பாம்பு, அப்பெண் வசிக்கும் அதே அடுக்கு மாடிக் குடியிருப்பில் செவ்வாய் இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக ஜில் சேண்டர்ஸ் எனும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
"அந்தப் பெண் தன் வாழ்க்கையின் அதிகபட்ச அச்சத்தை அப்போது அனுபவித்திருப்பார்," என்று ஜில் சேண்டர்ஸ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments