Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனப் படைகள் விலகும் காணொளி - வெளியிட்டது இந்திய ராணுவம்

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (14:21 IST)
ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி இந்திய மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ள பாங்காங் த்சோ ஏரிப் பகுதியிலிருந்து சீனப் படைகள் விலகும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

 
இந்தக் காணொளிகள் பாங்கோங் த்சோ ஏரியின் வடக்குக் கரைப் பகுதியிலும், அந்த ஏரியின் தெற்குக் கரையை ஒட்டியுள்ள கைலாஷ் மலைத்தொடர் பகுதியிலும் எடுக்கப்பட்டவை என்று தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. இந்திய ராணுவத்தால் மொத்தம் ஐந்து காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
 
மலைப் பகுதிகளில் தாங்கள் அமைத்த கூடாரங்களை சீனப் படையினர் அகற்றுவது, தாங்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்த மலைப் பகுதிகளில் இருந்து இறங்கி வாகனங்களை நோக்கிச் செல்வது, சீனப் படையினர் நிலைநிறுத்தப்படுவதற்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட காணொளிகள் ஆகியவை இந்திய ராணுவத்தால் செவ்வாயன்று பகிரப்பட்டுள்ளன.
 
சீனப் படைகள் அமைத்திருந்த பதுங்குக் குழிகள் மற்றும் தற்காலிக அரண்களை அவர்கள் அகற்றுவதை இந்திய ராணுவத்தின் புகைப்படங்கள் காட்டுகின்றன என்று செய்தி கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments