Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிப் படிப்பு: தனக்கு விருப்பமில்லாத படிப்பை படிக்க வற்புறுத்திய தந்தை மீது மகள் போலீஸில் புகார்

Webdunia
புதன், 15 மே 2019 (21:25 IST)
இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தனக்கு விருப்பமில்லாத படிப்பை படிக்க வற்புறுத்திய தந்தை மீது மகள் போலீஸில் புகார்.
 
தனக்கு விருப்பமில்லாத படிப்பை படிக்க வைக்க மறுத்து, தனது மதிப்பெண் சான்றிதழ்களை எடுத்து வைத்துக் கொண்டதாக தந்தை மீது மகள் புகார் அளித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இது தொடர்பாக 12ஆம் வகுப்பு படித்து முடித்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த மாணவி போலீஸ் புகார் எண்ணுக்கு வாட்சப்பில் புகார் அனுப்பியுள்ளார்.
 
தனக்கு இதழியியல் படிக்கவே விருப்பம், ஆனால் தன்னை பிஎஸ்.சி, இயற்பியல் அல்லது வேதியியல் படிக்க தனது தந்தை வற்புறுத்துவதாக அப்பெண் கூறுகிறார்.
 
"நான் என் தந்தைக்கு விருப்பமாக படிப்பை தேர்வு செய்ய மறுத்துவிட்டதால், என் சான்றிதழ்களை தர மறுக்கிறார்," என அந்த மாணவி தெரிவித்தார்.
 
பின்னர் அந்த மாணவியின் தந்தை சான்றிதழ்களை தர ஒப்புக் கொண்டதாக அவருக்கு காவல்நிலையத்தில் இருந்து அழைப்பு வந்ததாக அந்நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments