Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவுக்கு ஆதரவாக தைவானுடன் உறவை முறித்துக்கொண்ட நிகரகுவா

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (00:54 IST)
தைவான் நாட்டுடனான ராஜீய உறவை நிகரகுவா துண்டித்துக்கொண்டது. தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற பிராந்தியமாக தைவானை சீனா கருதுகிறது. எப்போதாவது ஒருநாள், தைவான் சீனாவுடன் மீண்டும் இணையும் என சீனா எதிர்பார்க்கிறது. ஆனால், ஜனநாயக ரீதியில் ஆட்சி செய்யும், சுதந்திரமான, இறையாண்மை மிக்க நாடாக தைவான் தன்னைக் கருதுகிறது.
 
இந்நிலையில், சில நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக, தைவானுடனான உறவை முறித்துக்கொண்டுள்ளன. அந்த பட்டியலில் சமீபத்தில் நிகரகுவா இணைந்துள்ளது. “தைவானுடனான ராஜீய உறவை நிகரகுவா முறித்துக்கொண்டது. இதன்மூலம், தைவானுடனான அதிகாரப்பூர்வ உறவு அல்லது தொடர்பை துண்டித்துள்ளது” என, நிகரகுவா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், “ஒரேயொரு சீனா மட்டுமே இருக்கிறது என அங்கீகரித்துள்ளதாக”, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இருநாடுகளின் பல ஆண்டு நட்பு இதன்மூலம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆழ்ந்த கவலையில் இருப்பதாகவும் தைவான் தெரிவித்துள்ளது.
 
2016-ல் தைவான் அதிபராக சாய் இங்-வென் பதவியேற்றதிலிருந்து தைவானின் சர்வதேச நட்பு நாடுகளின் எண்ணிக்கை 21-ல் இருந்து 14 ஆக சரிந்துள்ளது. தங்களுடன் ராஜீய உறவை வைத்துக்கொள்ள விரும்பும் நாடுகள், தைவானுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என சீனா ஏற்கனவே தெரிவித்திருந்தது.
 
அந்த வகையில், நிகரகுவா நாட்டின் முடிவை சீனா வரவேற்றுள்ளது. “தைவானுடனான தொடர்பை விரிவுபடுத்த வேண்டும்” என, நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா - சீனா வர்த்தக போர்! பேச்சுவார்த்தையில் அமெரிக்கா வைத்த செக்!?

எந்த இந்திய விமானியும் கைதாகவில்லை.. பாகிஸ்தான் தகவல்.. பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி..!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் அழகர்.. பக்தி முழக்கத்தில் மக்கள்..!

எல்லையில் திரும்பும் அமைதி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments