Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலம் - சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கியது

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (12:04 IST)
தமிழ்நாட்டில் கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை ஜூன் 1 முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமான சேவை தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த 13ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது.

பிறகு மே 23ஆம் தேதி தொடங்கிய விமான சேவை மீண்டும் 25ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சேலம் - சென்னை இடையிலான பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கும் என்றும், வழக்கமான நேரப்படி விமானம் இயக்கப்படும் என்றும் சேலம் விமான நிலைய இயக்குநர் ரவீந்திர சர்மா தெரிவித்துள்ளார்.

ட்ரூ ஜெட் நிறுவனம் இயக்கும் இந்த பயணிகள் விமானம், தினமும் சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு காலை 8.15 மணிக்கு வந்தடையம். இதேபோல, சேலத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 9.35 மணிக்கு வந்தடையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments