Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயக்க மருந்து கொடுத்து என்னை கற்பழித்தார் - பாலிவுட் நடிகர் மீது பெண் தயாரிப்பாளர் புகார்

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (11:41 IST)
பிரபல இந்தி நடிகர் அலோக் நாத், தன்னை கற்பழித்ததாக திரைப்படக் கதாசிரியையும், தயாரிப்பாளருமான விண்டா நந்தா குற்றம்சாட்டியுள்ளார்.
 
திரையுலகில் பெண்கள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகளை தற்பொழுது அவர்கள் தைரியமாக வெளியே சொல்லி வருகிறார்கள். இதில் பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர்.
 
அந்த வரிசையில் இந்தியில் பிரபல திரைப்படக் கதாசிரியையும், தயாரிப்பாளருமான விண்டா நந்தா பிரபல ஹிந்தி நடிகரான அலோக் நாத் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
 
தன் பேஸ்புக் பக்கத்தில் அவர், அலோக் நாத்தை நேரடியாக குறிப்பிடாமல் அவரது கதாப்பாத்திர பெயரை குறிப்பிட்டு, அந்த நடிகர் என்னை 19 வருடங்களுக்கு முன்பு, அவர் வீட்டில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்க அழைத்திருந்தார். நானும் அங்கே சென்றேன். அங்கு அவர் எனக்கு மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை கற்பழித்துவிட்டார்.
இதனை என் நண்பர்களிடம் கூறினேன். அவர்கள் அந்த சம்பவத்தை பற்றி வெளியே கூறாமல் மறந்துவிடும் படி அறிவுரை வழங்கினர்.
 
பாலியல் தொல்லைகளை கொடுத்து வரும் அலோக் நாத்தைப் போன்ற விலங்குகளைப் பற்றி தைரியமாக பெண்கள் வெளியே சொல்லுங்கள், அப்போது தான் இவர்கள் எல்லாம் பயப்படுவார்கள் என விண்டா நந்தா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்