Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படத்தில் இருந்து விலகியதற்காக ரூ. 4 கோடி கொடுத்த நடிகர்

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (18:33 IST)
பாலிவுட் நடிகர் ஒருவர், படத்தில் இருந்து விலகியதற்காக 4 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.


 

 
பாலிவுட்டின் இளம் நடிகர்களில் ஒருவர் சுஷந்த் சிங் ராஜ்புத். ‘எம்.எஸ். தோனி’ படத்தில் கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்தாரே… அவர்தான். கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் சுஷந்த் சிங், ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று படங்களில் நடித்து வருகிறார். ‘ரோமியோ அக்பர் வால்டர்’ படமும் அதில் ஒன்று.
 
சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சுஷந்த் சிங் அறிவித்துள்ளார். ஏற்கெனவே கொடுத்த கால்ஷீட்டில் ஏற்பட்ட குளறுபடியால், தன்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இதுவரை படப்பிடிப்பு நடந்ததற்கான செலவுத்தொகையாக தயாரிப்பாளருக்கு 4 கோடி ரூபாய் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments