Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் - இங்கிலாந்து போட்டியில் சூதாட்டம்: முன்னாள் வீரர் பகீர் புகார்!

பாகிஸ்தான் - இங்கிலாந்து போட்டியில் சூதாட்டம்: முன்னாள் வீரர் பகீர் புகார்!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (18:19 IST)
வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த போட்டியை இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர் நோக்கியுள்ளனர்.


 
 
ஆனால் பாகிஸ்தான் அணி இந்த இறுதிப்போட்டிக்கு தானாக வரவில்லை எனவும், தூக்கி வரப்பட்டுள்ளார்கள் எனவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அமிர் சொகைல் கூறியுள்ளார்.
 
இந்திய அணியிடம் லீக் போட்டியில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் அணி அதற்கடுத்து இலங்கை, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என வரிசையாக தோற்கடித்து அரையிறுதிக்குள் முதலாவது அணியாக அதிரடியாக நுழைந்தது.
 
ஆனால் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்ததை மேட்ச் பிக்சிங் என கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அமிர் சொகைல். பாகிஸ்தானுக்கு எதிரான அன்றைய போட்டியில் இங்கிலாந்து ஏன் அப்படி மெதுவாக ஆடியது என இன்னமும் ரசிகர்களுக்கு சந்தேகமாகத்தான் உள்ளது.
 
இந்நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமிர் சொகைல், வெளியிலுள்ள சக்திகள் மூலமாகத்தான் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. நன்றாக விளையாடினால் பாராட்டுவோம் இல்லையென்றால் விமர்சிக்கத்தான் செய்வோம். இந்த வெற்றியை கொண்டாடக்கூடாது. நீங்கள் இந்த இடத்துக்கு தூக்கி கொண்டு வரப்பட்டுள்ளீர்கள் என குற்றம் சாட்டினார் அவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments