Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பிக் கொடுத்த மேத்யூஸ்… ஷகீப் விக்கெட்டை எடுத்தபின் செய்த செயல்!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (08:30 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ்  பேட் செய்ய தாமதமாக வந்ததால் அவரை டைம்ட் அவுட் முறையில் விக்கெட்டுக்கு அப்பீல் செய்தனர் வங்கதேச வீரர்கள். அதை ஏற்ற நடுவர்கள் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக Timed Out முறையில் மேத்யூஸை அவுட் என அறிவித்தனர்.

இது இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்தால் போட்டி முடிந்ததும் பங்களாதேஷ் மற்றும் இலங்கை வீரர்கள் போட்டி முடிந்ததும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் பேட் செய்யும் போது கேப்டன் ஷகிப் அல் ஹசனின் விக்கெட்டை வீழ்த்திய ஏஞ்சலோ மேத்யூஸ் தன்னுடைய கையைக் காட்டி “இது நீங்கள் வெளியேற வேண்டிய நேரம் (டைம் அவுட்)” என பதிலடி கொடுக்கும் விதமாக நடந்துகொண்டார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments