Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சி எஸ் கே அணியில் இணைகிறாரா அஸ்வின்… புதிய பொறுப்பு!

அஸ்வின்
vinoth
வியாழன், 6 ஜூன் 2024 (07:35 IST)
இந்திய அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். அவர் அறிமுகமான தொடக்கத்தில் சில சீசன்களில்  சென்னை அணிக்காக ஆடி பிரபலமடைந்தார்.

இந்நிலையில் இப்போது அவருக்கு சி எஸ் கே அணியில் புதிய பொறுப்பு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகரில் புதிதாக அமையவுள்ள செயல்திறன் மையத்துக்காக தலைமை பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அங்குதான் இனி சி எஸ் கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபாடுவார்கள் என சொல்லப்படுகிறது. மேலும் அவர்களுக்கான ஆலோசனைகளும் அஸ்வின் தலைமையில் வழங்கப்படும் என தெரிகிறது.

சி எஸ் கே அணியில் புதிய பொறுப்பை பெற்றுள்ளதால் அஸ்வின் மீண்டும் சி எஸ் கே அணியால் ஏலத்தில் எடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், “அஸ்வினை ஏலத்தில் எடுப்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஏலத்தில் அன்றைய நிலைமையை பொறுத்தது அது. ஆனால் அவர் இப்போது சிஎஸ்கே அணியின் ஒரு அங்கமாகியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

பீல்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா செய்த மிகப்பெரிய தவறு: நோபால் கொடுத்த அம்பயர்..!

நான்காவது அணியாக ப்ளே ஆஃப்க்கு சென்ற மும்பை இந்தியன்ஸ்!

என்னால் விளையாட முடியவில்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்கள் – தோனியை சாடிய ஸ்ரீகாந்த்!

இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி… மே 24 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments