Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்கு பாராட்டு பத்திரம் வாசித்த பிரபல கிரிக்கெட் வீரர்

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (19:55 IST)
சர்வதேச போட்டிகளிலிருந்து யுவராஜ் சிங்கை தொடர்ந்து தோனியும் ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மெக்ராத் தோனி குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். உலக கோப்பை ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20ல் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாய் இருந்தவர் தோனி. தற்போது பாகிஸ்தானுடன் விளையாடிய ஆட்டத்தில் ஒரு ரன்னில் விக்கெட் இழந்து அவர் வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

இந்நிலையில் இந்தியாவுக்கு சுற்று பயணம் வந்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மெக்ராத் டோனியின் பதவி விலகல் குறித்து “தோனி ஓய்வு பெறுவது தொடர்பாக எங்கும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் தோனி ஓய்வு பெற விரும்பும் வரை அவர் விளையாட வேண்டும். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments