Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த போட்டியில் நான்கு ஸ்பின்னர்களையும் இறக்குவோம்… இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் தடாலடி!

vinoth
புதன், 31 ஜனவரி 2024 (10:07 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “ இங்கிலாந்து வீரர்கள் பின்பற்றும் பாஸ்பால் அனுகுமுறைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும். அதற்கு ஏற்றவாறு திட்டங்களையும் வியூகங்களையும் வகுப்போம்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான பிரண்டன் மெக்கல்லம் விசாகப்பட்டிணத்தில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசியுள்ளார். அதில் “இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எங்களிடம் உள்ள நான்கு ஸ்பின்னர்களையும் ஆடவைக்கவும் வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார். விசாகப்பட்டணம் மைதானமும் சுழல்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments