Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தோனியின் உடல்நிலை எப்படி உள்ளது?… சிஎஸ்கே CEO தகவல்!

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (17:13 IST)
ஐபிஎல் -2023, 16 வது சீசன் இறுதிப் போட்டியில் சென்னை கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் இந்த சீசன் முழுவதும் முழங்கால் வலியால் அவதிப்பட்டு ஓடுவதற்கு சிரமப்பட்ட சிஎஸ்கே கேப்டன் தோனி, ஐபிஎல் கோப்பை முடிந்ததும் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

சிகிச்சைக்குப் பிறகு சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்று இப்போது ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.

அதில் “தோனியிடம் இந்த சீசனில் விளையாட முடியுமா என நாங்கள் கேட்கவில்லை. அவரால் விளையாட முடியவில்லை என்றால் எங்களிடம் நேரடியாக சொல்லி இருப்பார். இறுதிப்போட்டி வரை அவர் எங்களிடம் எதுவும் பேசவில்லை. அதற்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள போகிறேன் எனக் கூறினார். இப்போது அவர் உடல் நிலை வேகமாக குணமாகி வருகிறது.  சில வார ஓய்வுக்குப் பிறகு அவர் பயிற்சியில் ஈடுபடுவார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments