Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அபார வெற்றி..!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (07:36 IST)
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 39.4 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஹோப் 68 ரன்களும் ரூதர்போர்டு 63 ரன்களும் எடுத்தனர்.
 
இதனை அடுத்து 203 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 32.5 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. வில் ஜேக்ஸ் அபாரமாக விளையாடி 73 ரன்கள் எடுத்தார்.  இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்  சாம் கர்ரன் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை எடுத்ததை எடுத்து அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது  
 
முதலாவது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளதால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments