Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி ஆசியக்கோப்பையில் தன் ஃபார்மை மீட்டெடுப்பார்… பிசிசிஐ தலைவர் ஆதரவு

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (16:16 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும்  விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர். இதையடுத்து அவரை அணியில் இருந்து நீக்கவேண்டும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தற்போது ஆசியக்கோப்பை தொடரில் அவர் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் அவரின் பார்ம் குறித்து பேசியுள்ள சவுரவ் கங்குலி “கோலி இந்திய அணியின் சிறந்த வீரர். அவர் சேர்த்த ரன்களை யாரும் மறுக்க முடியாது. அவர் ஆசியக்கோப்பையில் மீண்டும் தன்னுடைய பார்மை மீட்டெடுப்பார்” எனக் கூறியுள்ளார்.

பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்படும் நிலையில் கங்குலியின் இந்த ஆதரவுப் பேச்சு கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments