Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் காண்ட்ராக்ட் முடிஞ்சிட்டு போய்ட்டு வரேன் மக்கா! – சிஎஸ்கேவுக்கு விடை கொடுத்த ஹர்பஜன்!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (12:21 IST)
பிசிசிஐயின் ஐபிஎல் போட்டிகளுக்கான அணி தேர்வு பணிகள் நடந்து வரும் நிலையில் தான் சிஎஸ்கேவிலிருந்து வெளியேறியதாக ஹர்பஜன் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் ஹர்பஜன் சிங். சிஎஸ்கேவுடனான ஒப்பந்தத்தில் அவர் இருந்தாலும் கடந்த ஆண்டு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக அணியில் புதிய வீரர்கள் பரிந்துரை, அணியிலிருந்து சில வீரர்களை நீக்குதல் ஆகிய நடவடிக்கைகளை அணி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங் “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான எனது ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இந்த அணிக்காக விளையாடியது ஒரு அற்புத அனுபவம். அழகான நினைவுகளும், நல்ல நண்பர்களும் இந்த சில வருடங்களில் கிடைத்தன. சென்னை அணி நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு சிறப்பான இந்த இரண்டு ஆண்டுகளுக்காக நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

‘கோலி சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்துவிட்டார்’… முன்னாள் வீரரின் கருத்து!

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

அடுத்த கட்டுரையில்
Show comments