Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான டி 20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டன்!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (08:06 IST)
ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடரை அரையிறுதியில் இருந்து தோற்று வெளியேறிய பின்னர் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் டி 20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய டி 20 அணி
ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), சூர்யகுமார் ( து. கேப்டன்), கே எல் ராகுல், இஷான் கிஷான், தீபக் ஹூடா, ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், சஹால், அக்ஸர் படேல், அர்ஷ்தீப், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மவி, புவனேஷ்வர் குமார்

ஒரு நாள் அணி
ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (து.கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், இஷான் கிஷான், வாஷிங்டன் சுந்தர், சஹால்,  குல்தீப் யாதவ்,அக்ஸர் படேல்,  முகமது ஷமி,  முகமது சிராஜ்,  உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments