Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியை கேப்டன் பதவியில் நீட்டிக்க அனுமதித்து இருந்தால் ....- ரஷீத் லத்தீப் தகவல்

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (19:59 IST)
விராட் கோலியை கேப்டன் பதவியில் நீட்டிக்க அனுமதித்து இருந்தால் இந்திய அணி 100 சதவீதம் உலகக் கோப்பைக்கு தயாராக இருந்திருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.
 
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது.

சமீபத்தில் இதற்கான அட்டவணையை ஐசிஐசி வெளியிட்டது

இதன் படி அக்டோபர் ஐந்தாம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி தொடங்க உள்ளது. கடைசி லீக் போட்டி நவம்பர் 12ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது

முதல் செமி பைனல் நவம்பர் 15ஆம் தேதியும் இரண்டாவது செமி பைனல் நவம்பர் 16ஆம் தேதி இறுதி போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்,  விராட் கோலியை கேப்டன் பதவியில் நீட்டிக்க அனுமதித்து இருந்தால் இந்திய அணி 100 சதவீதம் உலகக் கோப்பைக்கு தயாராக இருந்திருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

''இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசோதித்து வருகிறது. தேர்வு முறையில் தற்போது திணறி வருவதால்தால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 20 தொடரை இழந்தது.

உலகக் கோப்பையிலும் சீனியர் வீரர்களை நம்பித்தான் உள்ளது இந்திய அணி. விராட் கோலியை கேப்டனாக  நீடிக்க அனுமதித்து இருந்தால், உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி  100 சதவீதம் தயாராக இருந்திருக்கும் ‘’என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments