Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் ட்ராவிட்டுக்கு கொரோனா! ஆசியக்கோப்பைக்கு செல்வாரா?

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (12:10 IST)
இந்திய அணியின் கிரிக்கெட் அணி பயிற்சியாளரான ராகுல் ட்ராவிட்டுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராகவும், தற்போதைய இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்து வருபவர் ராகுல் ட்ராவிட். இந்த மாத இறுதியில் அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஆசியகோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் அரபு அமீரகம் புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது தலைமை பயிற்சியாளரான ராகுல் ட்ராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பயிற்சி வழங்க அவர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments