Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே எல் ராகுல் இடத்துக்கு வரும் நெருக்கடி… முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனம்!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:21 IST)
இந்திய அணிக்கு எதிர்காலத்தில் கேப்டனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுல் மோசமான ஆட்டத்திறன் காரணமாக அவரிடம் இருந்த துணைக் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் முக்கியத்துவமும் அணியில் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கே எல் ராகுலின் ஃபார்ம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் முன்னாள் வீரர் வெங்கடேஸ்வர பிரசாத் மற்றும் கபில்தேவ் ஆகியோர், துணைக் கேப்டன் என்ற காரணத்துக்காக பார்மில் இல்லாத ராகுலை அணியில் தொடர்ந்து இடம்பெற செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று அதிரடியாகக் கூறிவருகின்றனர்.

திறமையான சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் அணியில் இடமில்லாமல் இருந்துவருகின்ற நிலையில், கேஎல் ராகுல் தொடர்ந்து சொதப்பினால் அவர் இடம் பறிபோக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments