Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி மீதான கேள்விக்குறி... கபில் தேவ் கூறுவது என்ன?

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (17:35 IST)
இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக சிறப்பாக விளையாடியது. தற்போது இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் முத்தரப்பு போட்டிகளில் விளையாடிவருகிறது. 
 
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கோலி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பயிற்சி ஒரு மனிதனை முழுமையடையச் செய்கிறது. பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளில் பயில வேண்டும். 
 
எந்தச் சூழ்நிலையிலும் இந்த பிட்ச்களிலும் ஆட முடியும் என்பதே உலகின் சிறந்த வீரர் என்பதற்கான அளவுகோல். இந்த வகையில் விராட் கோலி மீது ஒரு கேள்விக்குறி இருக்கிறது. 
 
உலகிலேயே கடினமான இடம், ரன்கள் எடுப்பது எளிதல்ல என்று கருதப்படும் இங்கிலாந்தில் கோலி ரன்கள் எடுக்க வேண்டும். இங்கிலாந்தில் நல்ல தொடக்க கண்டால் அவருக்கு நல்லது, 
 
ஏனெனில் உலகின் தலைசிறந்த வீரராக வேண்டுமென்று அவர் விரும்பினால் அவர் கிரிக்கெட் விளையாடும் அனைத்து இடங்களிலும் ரன்கள் குவிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments