Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

vinoth
சனி, 24 மே 2025 (11:01 IST)
கடந்த பல சீசன்களாக தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெங்களூர் அணி, இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரையிலான 13 போட்டிகளில் 8 போட்டிகளை வென்று, ஒரு போட்டியில் முடிவின்றி 17 புள்ளிகளோடு புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இடம்பிடித்து ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

அதனால் இந்த முறை அந்த அணிக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என யூகிக்கப்படும் நிலையில், அந்த அணிக்கு அடுத்தடுத்துப் பெரும் பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.  ஒரு வார ஒத்திவைப்பதற்குப் பிறகு தற்போது ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கிய நிலையில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆர் சி பி க்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை. ஒன்றில் தோல்வியும், ஒரு போட்டி கைவிடப்பட்டும் ஆர் சி பி அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த முறை ஆர் சி பி அணிக் கோப்பையை வெல்லவேண்டும் என்பதை விட, கோலி கோப்பையை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதுதான் பலகோடி ரசிகர்களின் ஆசையாக உள்ளது. 18 ஆண்டுகளாக ஒரே அணிக்காக விளையாடி வரும் கோலி அந்த அணியில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் ஆர் சி பி அணிக்காக 800 பவுண்டரிகளை விளாசினார். ஒரே அணிக்காக ஒரு வீரர் அடித்த அதிகபட்ச பவுண்டரிகள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

ஆறுதல் வெற்றியா இருந்தாலும் பரவாயில்ல! ஆர்சிபியை ஆல் அவுட் ஆக்கிய சன்ரைசர்ஸ்!

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments