Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெதுவாக விளையாடியது ஏன்.. விராட் கோலி அளித்த பதில்!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (06:53 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையில் நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்ற நிலையில், தென் ஆப்பிரிக்கா மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 121 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்திருந்தார். கடைசி நேரத்தில் கூட அவர் அதிரடியாக விளையாடாமல் எதிர்முனை வீரர்களுக்கு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்தார்.

இது குறித்து போட்டி முடிந்ததும் பேசிய அவர் “நான் ஆடிக் கொண்டிருக்கும் போது எனக்கு அணி நிர்வாகத்திடம் இருந்து வந்த அறிவுரை பொறுமையாக விளையாட சொல்லிதான். அதனால் கடைசி வரை களத்தில் இருக்கவேண்டும் என நினைத்து ஆடினேன். ஆடுகளம் ஒரு கட்டத்துகு மேல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியதும் ஆட்டத்தை மாற்றிக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments