Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஞ்சுரி போட்ட பெட்ரோல் விலை… குரல் கொடுத்த கிரிக்கெட் வீரர்!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (17:33 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான மனோஜ் திவாரி பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து கூறிய கிரிக்கெட் வீரர்களைக் கலாய்க்கும் விதமாக சக கிரிக்கெட் வீரரான மனோஜ் திவாரி ‘“நான் சிறுவனாக இருந்தபோது பொம்மலாட்டத்தை பார்த்ததில்லை. பொம்மலாட்டத்தை காண எனக்கு 35 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர்கள் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரியாக பதிவிடுவதைதான் அவர் அவ்வாறாக குறிப்பிட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது’ எனக் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

இந்நிலையில் இப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து அவர் ‘பெட்ரோல் மற்றும் டீசல் விலை சிறப்பான இன்னிங்ஸை விளையாடியுள்ளது. இக்கட்டான சூழலிலும் பெட்ரோல் சதம் அடித்துள்ளது. அதற்கு இணையாக டீசலும் நன்றாக பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளது. சாமான்ய மக்களுக்கு எதிராக விளையாடுவது எளிதானதல்ல. ஆனால் அதை இருவரும் சாதித்துள்ளனர்’ என அரசை கேலி செய்யும் விதமாக டிவீட் செய்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments