Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல காண்டுல இருக்கேன்.. நெருப்புடா நெருங்குடா! – ’தல’ தோனி எண்ட்ரி பாடலில் அதிர்ந்த மைதானம்!

Webdunia
புதன், 24 மே 2023 (08:39 IST)
நேற்றைய ஐபிஎல் குவாலிஃபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் தோனி மைதானத்திற்குள் நுழைந்தபோது ஒலித்த பாடல் வைரலாகியுள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 172 ரன்களை குவித்திருந்த நிலையில், இரண்டாவதாக களமிறங்கிய குஜராத் அணியை ஃபீல்டிங்கில் வெகுவாக கட்டுப்படுத்தியது.

இதனால் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்த போட்டியில் தோனியின் சிக்ஸர் ஷாட்டுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோஹித் ஷர்மா வீசிய பந்தில் ஹர்திக் பாண்ட்யா கேட்ச் பிடித்ததால் அவுட் ஆனார்.

ஆனாலும் ‘சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்’ என்ற லெவலில் அவருக்கான மவுசு என்றும் குறையவில்லை. தோனி மைதானத்திற்குள் நுழைந்தபோது “கொல காண்டுல இருக்கேன்.. கொல்லாம விட மாட்டேன்” என்ற டயலாக்குடன் ஒலித்த “நெருப்புடா நெருங்குடா” பாடல் மைதானம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. முன்னதாக தோனி எண்ட்ரியின் போது ஒலித்த படையப்பா, பாட்ஷா பாடல்களும் பெரும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments