Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதி இல்லை! – பிசிசிஐ அதிரடி!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (16:55 IST)
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இந்த மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த தொடரிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரலில் நடைபெற வேண்டிய நிலையில் கொரோனா பாதிப்புகள் காரணமாக டிசம்பரில் அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி ஏப்ரலில் தொடங்க பிசிசிஐ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல்லில் விளையாட உள்ள வீரர்கள் சிலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மற்ற வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், போட்டிகள் தொடங்கும் முன்னதாக அனைத்து வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனால் இந்த ஐபிஎல் தொடரிலும் மைதானத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments