Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது… ரோஹித் ஷர்மா டிவீட்!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (10:17 IST)
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி அதிரடியாக விலகியுள்ளார்.

இந்திய அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இந்திய அணியை பல சாதனைகளைப் படைக்க வழிவகுத்தவர் விராட் கோலி. ஆனால் கடந்த சில மாதங்களாக அவருக்கும் பிசிசிஐக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், டி20 அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பின்னர் ஒரு நாள் கேப்டன் பொறுப்பும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது அவர் அதிர்ச்சியளிக்கும் விதமாக சில தினங்களுக்கு முன்னர் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதனால் இந்திய ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் லிமிடெட் ஓவர் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கோலியின் ராஜினாமா குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘அதிர்ச்சி… ஆனால் இந்திய கேப்டனாக நீங்கள் செய்த சாதனைகளுக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணிக்கு இப்போது அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட போவது யார்’ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம்… தோனி ஓபன் டாக்!

‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments