Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்… உலகக் கோப்பை குறித்து ரோஹித் ஷர்மா பேச்சு!

vinoth
புதன், 12 மார்ச் 2025 (07:53 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இரு தினங்களுக்கு முன்னர் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.  இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய அணி.

இந்த போட்டி முடிந்ததும் மகிழ்ச்சியான முகத்தோடு ரோஹித் ஷர்மா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறப்போவதில்லை என்பதை உறுதிப் படுத்தியுள்ளார். இது பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அப்படியானால் 2027 ஆம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்துள்ள ரோஹித் “2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை பற்றி இப்போதே சொல்ல முடியாது. அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஆனால் நான் எதற்கும் தயாராகவே உள்ளேன். இப்போது நான் நன்றாகவே விளையாடுகிறேன். வீரர்களும் நான் அணியில் இருப்பதை விரும்புகின்றனர்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments