Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது… சிஎஸ்கே வீரரைப் பாராட்டிய வாசிம் அக்ரம்!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (10:35 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட், விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் அவர் 590 ரன்களை அடித்து இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் அவரை பற்றி பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் அவருக்கு இந்திய அணியில் பிரகாசமான வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் ருத்துராஜ் பேசியுள்ள அவர் “ அழுத்தத்தின் கீழ் ருத்துராஜ் சிறப்பாக விளையாடுகிறார். அவரிடம் உள்ள மிகப்பெரிய பலமே அவர் முழு உடல்தகுதியுடன் இருக்கிறார் என்பதுதான்” எனப் பாராட்டியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஐபிஎல் மற்றும் விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் போட்டித் தொடர்களில் சிறப்பாக விளையாடினாலும் இன்னும் அவருக்கு இந்திய அணியில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

சென்னை டெஸ்டடில் மூன்று ஸ்பின்னர்களோடு களம் காண்கிறதா இந்திய அணி?

அடுத்த கட்டுரையில்
Show comments