Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியிடம் இதை சொல்ல விரும்புகிறேன்… பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி ஆசை!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (08:52 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரசியல் காரணங்களால் இரு நாட்டு தொடர்களில் விளையாடுவதில்லை. இதனால் இரு நாட்டு ரசிகர்களும் இந்த அணிகள் மோதும் ஐசிசி போட்டிகளை ஒரு வெறியோடு பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் இருநாட்டு தொடர் நடக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஷாகித் அப்ரிடி இப்போது இந்திய பிரதமர் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதில் “தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்க்க முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும், ஏனெனில் இதுவே தீர்வு. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும், இரு அணிகளுக்கு இடையே போட்டித் தொடரை ஏற்பாடு செய்யவும் திரு மோடியிடம் கேட்டுக் கொள்கிறேன் இந்தியா இங்கு வந்திருந்தால் பெரிய விஷயமாக இருந்திருக்கும். சிறந்த கிரிக்கெட் மற்றும் பாகிஸ்தானுக்கு தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது சண்டை காலம் அல்ல"  எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “நாங்கள் இந்தியாவுக்கு வந்தபோது, ​​​​மக்கள் எங்களுக்கு நிறைய அன்பைக் கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. 2005 தொடரை நீங்கள் நினைவில் வைத்திருந்தால், அது பிரமாண்டமாக இருந்தது. ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் பாகிஸ்தானில் ஷாப்பிங் செய்வார்கள். அவர்களிடமிருந்து யாரும் பணம் வாங்குவதில்லை. இதுவே இரு நாட்டுக்கும் அழகு” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments