Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தை தடை செய்ய வேண்டும் – சசி தரூர் ட்விட்டரால் சர்ச்சை

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (12:32 IST)
உலக கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்துக்கு சாமர்த்தியம் போதாது என்னும் பொருள்படும்படி காங்கிரஸ் முக்கிய உறுப்பினரான சசி தரூர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

நடந்து வரும் உலக கோப்பை போட்டிகளில் மழையின் காரணமாக இதுவரை மூன்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வானிலை மோசமாக இருப்பதால் தொடர்ந்து இந்த வாரம் மழை தொடர்ந்தால் மேலும் சில போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்ட சசி தரூர் “இதுவரை மூன்று ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது மேலும் தொடரும். இதற்கு பதிலாக காலநிலை மாற்றங்கள் சரியாகும் வரை இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளை நடத்தாமல் தடை செய்துவிடலாம். அல்லது இங்கிலாந்து ஏன் மூடப்பட்ட விளையாட்டு அரங்கங்களை உருவாக்கக்கூடாது? இங்கிலாந்தில் வெயில்காலத்தில் கூட மழைதான் பெய்து கொண்டிருக்கிறது” என கிண்டலடிக்கும் தோனியில் பேசியிருக்கிறார்.

இந்தியா-பாகிஸ்தான் மோதவிருக்கும் முதல் ஆட்டம் வரும் ஜூன் 16 அன்று நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments