Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷிகார் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது… தினேஷ் கார்த்திக் கருத்து!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (08:45 IST)
இந்திய அணியில் இளம் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி தேர்வுக்குழுவுக்கு அதிக வேலைகளை கொடுத்து வருகின்றனர்.

ஷிகார் தவான் இந்திய அணியில் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் வரை அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதைய சூழல் அதற்கு இடம் கொடுக்காது என்பது போல மாறியுள்ளது.

ஏனென்றால் அவரின் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு இஷான் கிஷான், சுப்மன் கில் ஆகிய இரண்டு வீரர்கள் கடுமையான போட்டியாளர்களாக உருவாகி வருகின்றனர். இருவருமே தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச் சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இஷான் கிஷானின் சமீபத்தைய இரட்டை சதம் குறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக் “"சுவாரஸ்யமாக, ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்பும்போது யாராவது ஒருவர் வெளியேற வேண்டும்.  அது தவானாக இருக்கலாம். அவரின் மிகச்சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு சோகமான முடிவாக இது இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments