Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கில் மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (10:35 IST)
உலகக் கோப்பையின் இந்தியாவின் முதல் போட்டியான ஆஸ்திரேலியா – இந்தியா ஆட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஷுப்மன் கில் பங்கேற்கவில்லை. அடுத்த போட்டிகளுக்குள் அவர் குணமாகி வர வேண்டும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்து நடைபெற உள்ள உலக கோப்பை போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் டெல்லி சென்றுள்ள இந்திய அணியோடு செல்லாத அவர் சென்னையில் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்தார். இப்போது அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு ரத்தத்தில் உள்ள தட்டையணுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments