Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23 பந்துகளில் அரைசதம்… தனது சாதனையை தானே முறியடித்த இந்திய வீராங்கனை

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (09:10 IST)
காமன்வெல்த் போட்டித் தொடரில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்தை வென்றதன் மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

காமன்வெல்த் போட்டிகள் தற்பொழுது இங்கிலாந்தில் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் மகளிருக்கான டி 20 கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடந்த கால் இறுதி போட்டியில் இங்கிலாந்தை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 23 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சாதனையை படைத்தார்.

இதன் மூலம் டி 20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற அவரின் முந்தைய சாதனையை அவரே தகர்த்துள்ளார். இதற்கு முன்பு 24 பந்துகளில் அவர் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments