Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் மைதான ஊழியர்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும்?- சர்ச்சையைக் கிளப்பும் இலங்கை முன்னாள் கேப்டன்!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (14:43 IST)
ஆசியக்கோப்பை இறுதி போட்டி தொடங்கி சில மணிநேரங்களிலேயே இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று  8 ஆவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. இந்த போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் முகமது சிராஜ்.

இதன் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்ற சிராஜ், அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையான 4.15 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில்) பணம் முழுவதையும் கொழும்பு பிரேமதாசா மைதானப் பராமரிப்பாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார். அதே போல பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் 40 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக அறிவித்தார்.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இலங்கை அணியின் முன்னாள் கேப்டன அர்ஜுனா ரனதுங்கா “இதற்கு முன்னர் இந்திய அணி இலங்கை வந்துள்ளது. அப்போதும் மழை பெய்து, மைதான ஊழியர்கள் கடுமையாக உழைத்துள்ளார்கள். ஆனால் அப்போதெல்லாம் பணம் கொடுக்காமல், இப்போது மட்டும் ஏன் பணம் கொடுக்க வேண்டும். இதுபற்றி ஊடகங்கள் விசாரிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளது கிரிக்கெட் உலகில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments