Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-2- கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணி அசத்தல் வெற்றி !

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (22:52 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில்,  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிக அபாரமாக விளையாடிய நிலையில், இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு 209 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா மிக அபாரமாக விளையாடி 30 பந்துகளில் 71 ரன்கள் அடித்தார் என்பதும் கேஎல் ராகுல் 55 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில்,  கேமரன் கிரீன்61 ரன்களும், மேத்யூ 45 ரன்களும்,  ஸ்டீவ் 35 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்,

ஆஸ்திரேலியா அணி 4 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில், படேல் 3 விக்கெட்டுகளும், யாதவ் 2 விக்கெட்டுகளும், சாஹல் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments