Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி! – ருதுராஜ் கேப்பிடன்சி அபாரம்!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (09:39 IST)
சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் பிரிவில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.



சீனாவின் பெய்ஜிங் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் இதில் விளையாடி வருகின்றனர். இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என இதுவரை 83 பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர்.

இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டும் இடம்பெற்றுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி பங்களாதேஷை 96 ரன்களில் மடக்கியது.

பின்னர் பேட்டிங்கில் இறங்கிய இந்திய அணி 9வது ஓவரிலேயே 97 ரன்களை குவித்து வெற்றியை ஈட்டியது. ஜெய்ஸ்வால் ரன்களை எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களையும், திலக் வர்மா 55 ரன்களையும் குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டிகளின் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments