Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்து வீச்சாளர்களுக்கு பிசினஸ்கிளாசை விட்டுக் கொடுத்த விராட் கோலி, ரோஹித்

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (21:49 IST)
டி-20 உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

பல அணிகள் போட்டியிட நிலையில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறிவிட்டதால், அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா , இங்கிலாந்து, பாகிஸ்தான்  அணிகள் மோதவுள்ளன.

வரும் 10 ஆம் தேதி இந்திய அணி இங்கிலாந்திற்கு எதிராக மோதவுள்ளது. இதற்காக இன்று இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.

இந்த  நிலையில்,  அரையிறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக இன்று இந்திய அணியினர் அடிலெய்ட் நகருக்குச் சென்றனர். அப்போது, விமானத்தில், பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஓய்வு தேவை என்பதியால், விமானத்தில், அவர்கள் கால்களை நீட்டி அமரும் வகையில், பிசினஸ் கிளாஸ் இருக்கையை நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித்சரமார், ராகுல் டிராவிட் உள்ளிட்ட வீரர்கள் விட்டுக் கொடுத்துள்ளனர்.

அதாவது, ஐசிசி விதிகளின்படி, ஒரு  அணியில் 4 பேருக்கு மட்டும்தான் பிசினஸ் கிளாஸ் இருக்கை வழங்கப்படும் நிலையில், கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் டிராவிட், கோலி ஆகியோர் இந்த செயலைச் செய்துள்ளதற்கு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

‘கோலி சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்துவிட்டார்’… முன்னாள் வீரரின் கருத்து!

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

அடுத்த கட்டுரையில்
Show comments