Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிட் பத்தி சொல்லலை.. ஆனா தோனி இருப்பது நம்பிக்கை! – விராட் கோலி!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (15:52 IST)
உலகக்கோப்பை டி20 போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ள நிலையில் அணி பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டது குறித்து தெரியாது என கோலி கூறியுள்ளார்.

உலகக்கோப்பை டி20 போட்டிகள் சென்ற ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் உலகக்கோப்பை டி20 போட்டி சுற்று ஆட்டங்கள் இன்று முதல் தொடங்குகின்றன.

இந்த உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 12 அணிகளில் ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. இந்த உலகக்கோப்பை டி20 போட்டியே தான் கேப்டனாக பதவி ஏற்கும் கடைசி போட்டி என விராட் கோலி முன்பே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உலகக்கோப்பை டி20 குறித்து பேசியுள்ள விராட் கோலி “புவனேஸ்வர் பார்ம் குறித்து கவலையில்லை. ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் சிறப்பாகவே உள்ளார். அஸ்வினின் பந்து வீச்சும் நம்பகமாகவே உள்ளது. தற்போது உலகக்கோப்பையை வெல்வதுதான் மற்ற அணிகளை போல எங்களது நோக்கமும். ராகுல் ட்ராவிட் அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தோனி அணியின் ஆலோசகராக இருப்பது கூடுதல் நம்பிக்கையை அளிக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments