Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடருமா சின்னசாமி சாபம்.. முடியுமா ஆர்சிபி சோகம்? - இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதல்!

Prasanth Karthick
வியாழன், 24 ஏப்ரல் 2025 (09:39 IST)

பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொள்ள உள்ள நிலையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசன் தொடங்கி 8 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள நிலையில் 2 போட்டிகளில் மட்டுமே வென்று 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. கடந்த 4 போட்டிகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. கடந்த போட்டியில் போராடி சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியை தழுவியது.

 

நேரெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் அணியோ அனைத்து போட்டிகளிலும் கவனத்தை ஈர்க்கும்  விதமாக சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த 8 போட்டிகளில் 5ல் வெற்றிப்பெற்ற ஆர்சிபி அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இவ்வளவு சிறப்பாக விளையாடும் ஆர்சிபி அணிக்கு அதன் சொந்த மைதானமே சூன்யமாக இருப்பது தொடர் கதையாக உள்ளது.

 

இந்த சீசனில் ஆர்சிபி 3 போட்டிகளில் தோற்றுள்ளது. இந்த 3 போட்டிகளுமே அதன் ஹோம் க்ரவுண்டான சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டிகள்தான். இந்நிலையில் இன்றைய போட்டியும் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதால் செண்டிமெண்டாக ஒரு பயத்திலேயே ஆர்சிபி ரசிகர்கள் உள்ளனர். சின்னசாமி ஸ்டேடியத்தில் சாபத்தை தாண்டி ஆர்சிபி இன்றாவது வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments