சோகத்தில் முடிந்த விளையாட்டு பயிற்சி! ஈட்டி பாய்ந்து சிறுவன் மூளைச்சாவு!

Prasanth K
ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (13:00 IST)

தேனியில் விளையாட்டு பயிற்சியின்போது ஈட்டி பாய்ந்ததில் சிறுவன் மூளைச்சாவு அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தவர் 13 வயது சிறுவன் சாய் பிரகாஷ். அங்குள்ள பள்ளி மைதானத்தில் சிறுவன் சாய் பிரகாஷ் கால்பந்து போட்டிக்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

 

அப்போது அதே மைதானத்தில் திபேஸ் என்ற 19 வயது இளைஞரும் ஈட்டி எறிதல் பயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். எதிர்பாராத விதமாக திபேஸ் வீசிய ஈட்டி சாய் பிரகாஷை தாக்கியதில் அவர் நிலைக்குலைந்து விழுந்தார்.

 

உடனடியாக சிறுவன் சாய் பிரகாஷ் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாய் பிரகாஷ் மூளைச்சாவு அடைந்துள்ளார். இது அவரது பெற்றோர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments