1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (16:32 IST)
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடியாக 1000 ஜிபி கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.



 

 
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வருகைக்கு பின் போட்டி அதிகரித்துள்ளது. ஏர்டெல், வேடாபோன், ஐடியா மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் ஜியோ போட்டியாக பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
 
அதன்படி ஏர்டெல் ஆறு புதிய திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ரூ.599, ரூ.699, ரூ.849, ரூ.999, ரூ.1199 மற்றும் ரூ.1599 ஆகிய திட்டங்களில் 1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இதற்கான வேலிடிட்டி மார்ச் 31 2018 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சலுகை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு பெறுபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

சிந்து நதிக்கு அடுத்து ரவி நதியும் இல்லை!.. பாகிஸ்தானுக்கு இந்தியா செக்!...

7 வயது சிறுமியை கொன்று பிளாஸ்டிக் பேரலில் சடலத்தை மறைத்து வைத்த பக்கத்து வீட்டுக்காரர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனி விமானத்தில் சென்றதால் பிரச்சனையா? சட்டமன்றத்தில் கடும் விவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments