டார்கெட் டேட்டா யூசர்ஸ்: ஏர்டெல் புதிய யுக்தி!!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (14:16 IST)
முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழங்கியுள்ளது. அதிலும் அதிக அளவில் டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக இந்த சலுகையை வழங்கியுள்ளது. 
 
ரூ.49 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால், இதன் வேலிட்டி 24 மணி நேரம் மட்டுமே. 
 
இது மட்டுமின்றி ரூ.98 மற்றும் ரூ.146 விலையிலும் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டங்களில் 1 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஆனால், கூடுதல் டேட்டா தேவைப்படும் பட்சத்தில் ரூ.98 செலுத்தி 2 ஜிபி டேட்டா பெறலாம். இதன் வேலிடிட்டி ஐந்து நாட்கள்.
 
புதிய சலுகைகளை ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஆன்லைன் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சலுகை ஜியோவின் ரூ.52 திட்டத்திற்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏர்டெல் டேட்டா அளவையும் உயர்த்தியுள்ளது என்ப்து குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கக் காசு மோசடி வழக்கு: சென்னை பெண் ஆய்வாளர் அதிரடி கைது...

மைக்ரோசாப்ட் கொடுத்த திடீர் அதிர்ச்சி.. 4800 பேர் வேலையை விட்டு நீக்கம்...!

தவெக அரசுக்கு எதிராக அதிமுக, திமுக இணைந்து போராட்டம்.. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பு...!

ஸ்ஸ்ஸப்பா முடியல!.. உடலில் துர்நாற்றம்!. 3 வருஷ மெம்பர்ஷிப்பை கேன்சல் செய்த ஜிம்!..

டாஸ்மாக் பார்கள் மீண்டும் திறக்க உத்தரவு.. அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments