Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிழிந்தது ஏர்டெல் முகத்திரை: இனி ரியல் ஆஃபர் மட்டுமே...

Webdunia
வியாழன், 17 மே 2018 (11:38 IST)
ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் போட்டி இடும் விதமாகவும், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளும் விதமாகவும் ஏர்டெல் உண்மையான புதிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. 
 
ஆம், இனி ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்வோருக்கு உண்மையான அன்லிமிட்டெட் அனுபவத்தை வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.
 
ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் குறிப்பிட்ட டேட்டாவை வழங்கினாலும், அந்த நாளுக்கான டேட்டா முடிந்த பின்னரும் டேட்டா வேகம் குறைந்து செயல்படும். 
 
பிஎஸ்என்எல் டேட்டா வேகம் 128Kbps ஆக இருக்கும். சமீபத்தில்  ஜியோ டேட்டா வேகத்தை 128Kbps-ல் இருந்து 64Kbps ஆக குறைத்தது.  
 
இந்த நடைமுறையை ஏர்டெல் கொண்டுவந்துள்ளது. இதுநாள் வரை அன்லிமிடெட் சேவை என கூறினாலும், தினசரி டேட்டா முடிந்த பின்னர், மீண்டும் அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. 
 
ஏர்டெல் புதிய அறிவிப்புபடி, தினசரி டேட்டா வழங்கப்படும் சேவைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். வழக்கமான இன்டர்நெட் பேக் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும், கட்டணம் வசூலிக்கப்படும். 
 
புதிய சலுகையை பெற புதிதாய் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஏற்கனவே ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி டேட்டா வேகம் தானாக 128Kbps ஆக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 ரூபாய்க்கு கூலி வேலை பார்த்த சிறுவன்.. பல வருடங்களுக்கு பின் இன்று ரூ.ரூ.681க்கு முதலாளி..

12ஆம் வகுப்பு படித்த நானும், பாஸ்டன் பல்கலைக்கழக CJP திப்கேவும்.. ஆங்கில அறிவை ஒப்பிட்ட கங்கனா...

மீண்டும் டெல்லியில் போராட்டம்.. கரப்பான்பூச்சி அறிவிப்பு.. இந்த முறை யார் ராஜினாமா செய்யனும்..?

பெண் போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ மகள்.. அதன்பின் நடந்தது என்ன?

ஒரே நாடு, ஒரே தேர்தல்.. 2029க்கு முன்கூட்டியே வருகிறதா பாராளுமன்ற தேர்தல்?

அடுத்த கட்டுரையில்
Show comments