Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோவின் ஆட்டம் க்ளோஸ்: அமேசான் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (12:55 IST)
பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவெடுத்துள்ளது. இதற்காக 3,236 செயற்கைக்கோள்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. 
 
ஆம், இணைய சேவை கிடைக்காத உலகின் பல பகுதிகளுக்கு அதிவேக இண்டெர்நெட் சேவைகளை வழங்க அமேசான் ‘புராஜக்ட் குய்பர்’ என்னும் அதிரடி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. 
 
இந்த திட்டத்தின்படி, 3,236 செயற்கைக்கோள்களை பூமிக்கு அருகில் உள்ள சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்த உள்ளனர். இதன் மூலம் குறைவான நேரத்தில் அதிவேக இணைய சேவையை வழங்க முடியுமாம். 
இந்த திட்டத்தை செயல்படுத்த ஒரு பில்லியல் டாலர் வரை செலவாகலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை சாத்தியப்படுத்தியதும், சரிவர இணையவசதி கிடைக்காத பல கோடிக் கணக்கான மக்களுக்கு இணைய வசதி எளிதாக கிடைக்கும் என அமேசான் குறிப்பிட்டுள்ளது. 
 
மேலும், அமேசான் இணைய கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்யவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. அப்படி இருக்க ஜியோவின் ஜிகா ஃபைபர் திட்டத்திற்கு கடும் போட்டியாக இது இருக்கும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments