Webdunia - Bharat's app for daily news and videos

Install App

BSNL-க்கு கோடிக் கணக்கில் செடில்மெண்ட் பாக்கி வைத்துள்ள Jio!

பிஎஸ்என்எல்
Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (12:12 IST)
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.167.97 கோடியை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நிலுவைக் கட்டணமாக வைத்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
சமீபத்தில் மாநிலங்களவையில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் குறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒருபோதும் மூடப்படாது என தெரிவித்தார். 
 
மேலும், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கின் தொலைத்தொடர்பு கோபுரங்களை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கப்பட்டு இதன் மூலம் வருவாய் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 
அதன் படி, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருக்கும் 13,146 மொபைல் டவர்களில் ரிலையன்ஸ் 8,363 டவர்களையும், ஏர்டெல் 2,799 டவர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 1,792 டவர்களையும் பயன்படுத்தி வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.167.97 கோடி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நிலுவைக் கட்டணம் வைத்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments